‘அம்மா’ அமைப்பில் பரபரப்பு: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா!

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தலைவர் ஸ்வேதா மேனன் மற்றும் நிர்வாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்ற நிலையில், வெறும் 10 மாதங்களிலேயே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டிருப்பது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

31 ஆண்டுகளாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த AMMA அமைப்பில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகவும், பின்னணிக் குரல் கலைஞர் குக்கு பரமேஸ்வரன் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டது.

ஆனால் பதவியேற்ற சில மாதங்களிலேயே தலைவரும் பொதுச்செயலாளரும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அலுவலக மேலாளர் அதுல்யா பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் அமைப்புக்குள் பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதோடு, பொருளாளர் உன்னி சிவபால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், பிப்ரவரி மாதம் நடைபெற்ற குடும்ப சங்கமம் நிகழ்ச்சிக்காக பெறப்பட்டதாக கூறப்படும் ரூ.70 லட்சம் நன்கொடை தொடர்பான கணக்குகள் குறித்து அமைப்புக்குள் கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரமும் நிர்வாகக் குழுவினரிடையே அதிருப்தியை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இணைச் செயலாளராக இருந்த அன்சிபா ஹசன் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார். அதற்கு பதிலாக அவர்மீதும் எதிர் புகார்கள் அளிக்கப்பட்டதால், அமைப்பின் உள்பிரச்சினைகள் வெளிப்படையாக பேசப்படும் நிலை ஏற்பட்டது.

இந்த தொடர் சர்ச்சைகளுக்கு தீர்வு காண பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. காக்கநாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த நடிகர் மோகன்லால் கலந்து கொண்ட நிலையில், பல முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து கடும் விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சிகள் நடந்ததாகவும், சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்வேதா மேனன் தலைமையிலான 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா செய்துள்ளது. மேலும், ஸ்வேதா மேனன் தனது அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், AMMA அமைப்பின் நிர்வாகப் பொறுப்புகளை கவனிக்க தற்காலிகக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ரமேஷ் பிஷாரடி பொறுப்பேற்றுள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suresh

Recent Posts

சமந்தாவின் வெற்றியை வாழ்த்திய நயன்தாரா

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

1 hour ago

தனுஷ் – ஸ்ரீலீலா கூட்டணியின் ‘ஓம்’ படத்தில் பிரம்மாண்ட நடனப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…

1 hour ago

‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு: கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…

1 hour ago

செப்டம்பர் 11-ல் திரைக்கு வரும் ‘டிமான்டி காலனி 3’!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…

2 hours ago

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

1 day ago

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…

1 day ago