நந்தினி எடுத்த முடிவு, சந்தோஷப்பட்ட அருணாச்சலம்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துக்கொண்டிருக்க அவரது நண்பர் சரக்கு ஊத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கல்யாண ரிஜிஸ்டர் ஆயிருந்தா சந்தோஷமா இருந்திருப்பல என்று சொல்ல நான் சந்தோஷமா இருக்கிறேன் என்பதை விட என் தாய்க்குலத்த வெறுப்பேத்துவது தான் எனக்கு முக்கியம் என்று சொல்லுகிறார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் போன் போட அவர் எடுத்துப் பேசுகிறார். அவரிடம் அருணாச்சலம் விஜியிடம் பேச வேண்டும் வீட்டுக்கு வர சொல்லி சொல்லுகிறார் சரி என சொல்லிவிட்டு சூர்யா பக்கத்தில் குடித்துக் கொண்டிருக்க அப்பா தான் பண்ணாரு என்று சொல்ல, என்ன விஷயம் என்று கேட்க விஜியா வீட்டுக்கு வர சொல்றாரு என்று சொல்லுகிறார் சரி அப்பா சொன்னா ஏதாவது விஷயம் இருக்கும் சொல்லி அனுப்பி விடு என்று போன் போட விஜி சரி போறேன் என்று சொல்லுகிறார்.

மீண்டும் சூர்யா குடித்துக்கொண்டே இருக்க அவரது நண்பர் இன்னும் நான் ஒரு வாய் கூட குடிக்கல என்று சொன்னவுடன் சூர்யா அவரை பக்கத்தில் இழுத்து வாயிலிருந்து காத்த இழுத்து அவர் மூஞ்சில ஊத அவர் அப்படியே சூர்யா மேல் சாய்ந்து கொள்ள சூர்யா கட்டிப்பிடித்துக் கொள்கிறார். உடனே விஜி அருணாச்சலம் வீட்டிற்கு வருகிறார். அருணாச்சலம் அவரை வரவேற்க என்ன விஷயம் சார் என்று கேட்க நீயும் எங்க வீட்டுல ஒரு ஆளா இருக்கறதுனால நந்தினிக்கு தாலி பிரித்து கோர்க்க போகும் விஷயத்தை சொல்லுகிறார். என்ன பிரச்சனை நடந்தாலும் இதை பண்ணிதான் ஆகணும் என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி முடியாது என்பதில் உறுதியாக இருக்கா ஆனா இந்த விஷயத்தை நம்ம இப்படியே விட முடியாது கொஞ்சம் நந்தினி கிட்ட பேசி பார்க்கிறியா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க, விஜி கூப்பிட என்னக்கா திடீர்னு வந்து இருக்கீங்க என்று கேட்க சும்மா உன்னை பார்த்து பேசலாம்னு தான் வந்தேன் என்று சொல்லுகிறார். என்ன நந்தினி கயிறு இப்படி இருக்கு என்று கேட்க ஐயா சொன்னாரா என்று கேட்கிறார். அவர் சொன்னார் தான் ஆனா எனக்கு பார்க்கும்போது கஷ்டமா இருக்கு என்று சொல்லுகிறார். உன்னை சுத்தி இவ்வளவு பேர் இருந்தும் ஆனா ஏதோ கப்பல் கவுந்த மாதிரி ஏன் இப்படி இருக்க. அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அறுந்து விழுகுற மாதிரி இருக்குற தாலியை மாத்தி கற்றதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதெல்லாம் ஒழுங்கான முறையில தாலி கற்றவர்களுக்கு நடக்கலாம் ஆனால் எனக்கு நடக்க தேவையில்லை எனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார். நான் கயிறு மாத்திக்கிறேன் எனக்கு தாலி பிரிச்சு கவுக்குற பங்க்ஷன் வேண்டாம். நந்தினி முடிவில் உறுதியாக இருக்க உடனே விஜி இதுக்கு மேல உன்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல சூர்யா அண்ணனுக்கு எதுவாக கூடாது என்று நினைச்சனா இந்த ஃபங்ஷன் நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு உன் அக்காவா நான் இதை சொல்றேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அருணாச்சலம் என்னம்மா பேசிட்டியா என்று கேட்ட திரும்பத் திரும்ப ஒரே மாதிரி தான் பேசிகிட்டு இருக்கா, நான் கயிறு மாத்திபண்ணு சொல்றா, குடும்பத்தை நினைத்து குற்ற உணர்ச்சி படுறா, கொஞ்ச நாள் போனா சரியா போயிடும் என்று விஜி சொல்ல,ஆனா இந்த பங்க்ஷன் நந்தினிக்கு நடந்தே ஆகணும் அப்பதான் நந்தினி அழுத்தமா இந்த வீட்டு மருமகளா இருப்பா, எந்த காலத்திலையும் நானும் சூர்யாவா அவளுக்கு சப்போர்ட்டா இருப்போம் எங்களுக்கு ஏதாவது நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுமா என்று சொன்னேன் கண்டிப்பா பண்றேன் சார் என்று சொல்லி விட்ட கிளம்புகிறார்.

மறுபக்கம் சூர்யா குடித்துவிட்டு பைக் ஓட்டிக் கொண்டு வர ஆக்சிடென்ட் நடக்கிறது. இதனால் அவருக்கு கையில் அடிபட அங்கு இருப்பவர்கள் குடித்திருக்கிறார் என்று சொல்லி ஹாஸ்பிடலுக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்புகின்றனர். டாக்டர் சூர்யாவிடம் ஏதோ சின்ன அடி என்பதால் பிரச்சனை இல்ல,ஆனா உங்க எதிர்ல வந்தவர் என்ன தப்பு பண்ணாரு அவருக்கும் அடி பட்டு இருக்கும் இல்ல குடிச்சிட்டு எதுக்கு வண்டி ஓட்டுறீங்க என அட்வைஸ் கொடுக்க நீங்க இவ்வளவு சொல்றீங்கன்னா அப்ப என் மேல தான் தப்பு இருக்கும் சாரி டாக்டர் என்று சொல்லி மெடிசன் பேப்பரை வாங்குகிறார். உங்க கூட யாரும் வரலையா என்று கேட்க நான் தனியா தான் வந்தேன்னு சொன்ன நீங்க வண்டியெல்லாம் ஓட்டக்கூடாது என்று சொல்லுகின்றன.நான் ஆட்டோல தான் வந்து ஆட்டோலே போறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். சூர்யாவிற்கு அடிபட்டதாகவும் வண்டி அங்கு இருப்பதாகவும் அருணாச்சலத்திற்கு ஒரு நபர் போன் பண்ணி பேசுகிறார். உடனே பதற்றப்பட்ட அருணாச்சலம் சரி நான் போன் பண்ணி பாக்குறேன் என்று போன் பண்ணுகிறார்.

மாதவி அருணாச்சலம் டென்ஷன் ஆக இருப்பதை பார்த்து சூர்யாவோட வண்டி ஆக்சிடென்ட் ஆயிருக்கு ஹாஸ்பிடல் இருக்கு போய் இருக்கிறதா சொல்றாங்க என்று சொல்ல மாதவி அதிர்ச்சி அடைகிறார். அதெல்லாம் ஒன்னும் இருக்காதுபா பயப்படாதீங்க, சூர்யாவிற்கு எதுவும் ஆகி இருக்காது கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம் ஏதாவது கால் வரும் என்று சொல்ல சூர்யா ஆட்டோவில் இருந்து கையில் கட்டுடன் இறங்க இருவரும் பதற்றப்படுகின்றனர். அருணாச்சலம் என்னடா இப்படி அடிபட்டிருக்கு என்ன ஆச்சு, நீங்க பயப்படற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல ஒருத்தன் குறுக்கல வந்துட்டான் அதனால பேலன்ஸ் பண்ண முடியாம கீழே விழுந்துட்டேன் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். உடனே அசோகன் நந்தினி சுரேகா கல்யாணமென அனைவரும் வெளியே ஓடி வர சுரேகாவும் அசோகனும் நீ ஓட்ட வேகத்துக்கு மத்தவங்க தான் அடிபடனும் உனக்கு என்ன அடிபட்டு இருக்கு என்று கேட்கின்றனர். நீ இவ்வளவு கார் இருக்கும் போது எதுக்கு பைக்ல போனா என்று கேட்கிறார் கார்ல தாண்டி போன ஆனா கார் ட்ரபுல ஆயிடுச்சு அதனால டிரைவர் கிட்ட சொல்லி பைக் எடுத்துக்கிட்டு வர சொன்னேன் என்று சொல்ல அப்ப எதுக்கு பைக்ல வர எடுத்துட்டு வர சொன்னேன் இது மாதிரி ஆட்டோல கூட வந்திருக்கலாம் இல்லனா கார் புக் பண்ணி வந்து இருக்கலாம் இல்ல என்று சொல்ல சரி வா என்று வீட்டுக்குள் அழைத்து செல்கின்றன. உடனே மாதவி சுரேகாவுடன் நீ மேல போயிட்டு நந்தினி அங்க இருந்தா சூர்யா பக்கத்துல இருந்து அவளை வெளியே கூட்டிட்டு வந்துரு நான் போய் அம்மாகிட்ட சொல்றேன் அவங்க சூர்யாவை பார்க்க வரும்போது நந்தினி அங்க இருக்க வேணாம் என அவங்க பிரச்சனை பண்ணுவாங்க என்று சொல்லுகிறார். உடனே அசோகன் அவ்வளவு நல்லவளா மாறிட்டீங்களா என்று கேட்க எனக்கு இப்போ அம்மாவோட கோபத்தை கேட்கிற அளவுக்கு பொறுமை இல்ல டென்ஷனா இருக்கு அதனால நான் சொல்றத மட்டும் செய்யணும் அனுப்பி வைக்கிறார். சூர்யாவை நந்தினி மேலே கூட்டி வர அவர் தடுமாறி நடந்து வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி வெளியே காத்துக் கொண்டிருக்க மாதவி நந்தினியை வெளியே போக சொல்ல நந்தினி என் பொண்டாட்டி அவ இங்க என்கூட தான் இருப்பா, இஷ்டம் இருந்தால் பாக்க சொல்லு இல்லன்னா அப்படியே கிளம்ப சொல்லு என்று சொல்லுகிறார்.

சுந்தரவல்லி அழுதுகொண்டே அவை இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் என்னையும் என் பையனையும் மொத்தமா பிரிச்சிட்டா என்று சொல்ல நந்தினி அருணாச்சலத்திலும் தாலி பிரித்து கோர்க்கும் விஷயத்தை பண்ண சொல்லி சொல்ல அப்படியா என்று அருணாச்சலம் சந்தோஷமாக கேட்க ஆனால் என்று சொல்லியே நந்தினி எதையோ அருணாச்சலத்திலும் சொல்லுகிறார். அதற்கு அருணாச்சலம் சம்மதிப்பாரா? என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial promo update 02-01-25
jothika lakshu

Recent Posts

Karuppu Tamil Trailer

Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | ‪Sai Abhyankkar‬ | Dream…

7 hours ago

Naan Dhaan King Lyric Video

Naan Dhaan King Lyric Video | Con City | Arjun Das | Anna Ben |…

7 hours ago

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

3 days ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

3 days ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

3 days ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

3 days ago