தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மணிச்சந்திராவுக்கு இரண்டாவது இடமும் மாயாவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. இரண்டாவது வாரத்திலேயே வெளியேற இருந்த மாயாவை விஜய் டிவி காப்பாற்றியது.
அதேபோல் மாயா நாமினேஷனில் இடம் பெறும் போதெல்லாம் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பலி கடாவாக்கி இறுதிப்போட்டி வரை கொண்டு வந்தது.
மாயாவுக்கு டைட்டிலை கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மக்களின் வாக்குகளின் படி அர்ச்சனாவுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இறுதிப்போட்டி வரை பயணித்த மாயா மற்றும் விஷ்ணு இருவரும் தங்களது முதல் பதிவை பதிவு செய்துள்ளனர். விஷ்ணு தனக்கு ஆதரவளித்த தன்னை புரிந்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மாயா தன்னுடைய தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல என தத்துவத்தை பேசியுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram

