சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன் நடிப்பு திறமையை காட்டியவர் மிருணாள் தாகூர். இவர் சீதாராமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது காதல் ஒரு அழகான உணர்வு என்றும் இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


