நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றன.
இவர்கள் பொதுவாகவே உணவு முறையில் கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்ததே.இப்படியான நிலையில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி என்று பார்க்கலாம்.
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. அன்றாடம் உண்ணும் உணவில் நோயாளிகள் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வரலாம்.
மேலும் மாவு சத்து நிறைந்த உணவுகளில் எலுமிச்சை சாறு சேர்ப்பது மிகவும் அவசியம். எலுமிச்சை பழத்தில் இருக்கும் பல ஆரோக்கியமான சத்துக்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை துரித படுத்துகிறது.

