நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பும் காரைக்குடியில் நடைபெற உள்ளது. குறிப்பாக சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளையே விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வைத்திருக்கிறாராம்.
கொரோனா சூழல் என்பதால் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரண்டு பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக்கு அனுமதி தர முடியாது என அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். இதனால் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே விக்ரம் படப்பிடிப்பு நடத்தும் சூழல் உருவாகி உள்ளது.
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்னும் பத்து நாட்கள் நடைபெற இருப்பதால், கமலின் விக்ரம் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.