பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம்
ஹிந்தி திணிப்புக்கு எதிரான கதைக்களம் பராசக்தி படம் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கமல் வெளியிட்டுள்ள கடிதம் காண்போம்..
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன். அந்தக் கடிதத்தில்,
‘துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘பராசக்தி’ படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப் போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று.
ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்
பின்குறிப்பு: பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக் கொண்டதால் பின் தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குநர் சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.
இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூர்யா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.


