சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கிறாரா? – இயக்குனர் பி.வாசு விளக்கம்

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. இப்படத்தின் 2-ம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராக உள்ளது என்றும், ராகவா லாரன்ஸ் கதாநாயகாக நடிப்பார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டியில் கூறுகையில், “சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான கதை, திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சிக்கான இணைப்பு சரியாக அமைய வேண்டும் என்பதால் அவசரப்படாமல் வேலை செய்கிறோம். அடுத்த மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.

சந்திரமுகி படத்தில் நடித்தவர்கள் 2-ம் பாகத்தில் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை. ‘சந்திரமுகி 2’ படத்தின் கதை வேறு மாதிரி இருக்கும். சந்திரமுகி படத்தில் ஒரு சம்பவம் நடந்தது. சந்தரமுகி 2-ம் பாகத்தில் இன்னொரு சம்பவம் இருக்கும். ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பில் இணைவார்” என்றார்.

Suresh

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

3 hours ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

3 hours ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

3 hours ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

3 hours ago

’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…

3 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago