மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி உருக்கமான திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிய விஜய் மற்றும் அஜித் இடையேயான போட்டி ரசிகர்களிடையே நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தது. தற்போது விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டு முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், அஜித் குமார் தனது நீண்டநாள் ஆர்வமான கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். துபாய் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் தனது அணியுடன் பங்கேற்று வரும் அவர், தற்போது திரைப்படங்களிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துள்ளார். இருப்பினும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது அடுத்த படம் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் சுட்டிக்காட்டி, மன்சூர் அலி கான் தனது கடிதத்தில், “உங்களை அடையாளம் காட்டியது சினிமா; கோடிக்கணக்கான ரசிகர்களை உங்களுக்கு உருவாக்கியது சினிமா. கார் ரேஸிங் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம் புரிகிறது. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையோடு இணைந்திருக்கும் திரைத்துறையை கருத்தில் கொண்டு மீண்டும் நடிக்க வாருங்கள். ரசிகர்களையும் மகிழ்விக்கவும், தயாரிப்பாளர்களுக்கும் உறுதுணையாக இருக்கவும் நீங்கள் திரும்ப வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது இந்த திறந்த கடிதம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

Suresh

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

1 hour ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

1 hour ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

2 hours ago

’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…

2 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…

1 day ago