’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார்.

வனவிலங்கு பொருட்களை சட்டவிரோதமாaக வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் மோகன்லால், பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் தனது வசமுள்ள அனைத்து வனவிலங்கு பொருட்களின் விவரங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு, வருமான வரித்துறை அவரது இல்லத்தில் நடத்திய சோதனையில் யானைத் தந்தங்கள் மற்றும் தந்தச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முறையான அனுமதியின்றி நான்கு யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனிநபர்கள் தங்கள் வசமுள்ள வனவிலங்கு பொருட்களை அறிவிக்க வேண்டும் என்ற கேரள வனத்துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்பு நான்கு யானைத் தந்தங்கள் இருப்பதாக தெரிவித்திருந்த மோகன்லால், தற்போது கூடுதலாக 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.

அவர் அறிவித்துள்ள தந்தச் சிலைகளில் கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி உள்ளிட்ட தெய்வ உருவங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோகிராம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

1 hour ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

1 hour ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

2 hours ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

2 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…

1 day ago