தமிழ் சின்னத்திரையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். இவர் தன்னுடன் நடனமாடிய யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து தற்போது இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இறுதியாக மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வந்த இவர் கர்ப்பமானதால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து இருப்பதாக யுவராஜ் அறிவித்துள்ளார்.மேலும் காயத்ரி பிறந்த நாளில் மகள் பிறந்து இருப்பதாகவும், இது எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram