நீரிழிவு நோய்க்கு வெந்தய இலை மருந்தாக பயன்படுகிறது.
பச்சை இலை காய்கறிகளில் வெந்தயக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் அதிகம் ஊட்டச்சத்து நிறைந்து உள்ளது. இந்த கீரை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
வெந்தயக் கீரையில் இருக்கும் ஆரோக்கியம் இதய நோய் பிரச்சினையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது ரத்தத்தை சீராக்கி இதயத்துடிப்பு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
முக்கியமாக இதில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது. மேலும் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது போன்ற நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வெந்தயக்கீரை மருந்தாக பயன்படுகிறது.

