தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தர்ஷினியின் கடத்தல் சம்பந்தமாக வீடியோ ஒன்று ஆதாரமாக கிடைக்க அதை பார்த்து ஈஸ்வரி பதற இந்த வீட்ல மேல இருக்கவங்க தான் இந்த வீடியோ எடுத்திருக்காங்க என்று சொல்கிறார் ஜனனி.
பிறகு அவர்கள் எல்லோரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது கதிர் போன் போட்டு உங்களுக்கு என்ன தெரியும் ஒழுங்கா வீட்டுக்கு வாங்க எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்ல பார்த்து கிழிச்சீங்க என கோபப்பட்டு போனை வைக்கிறார் நந்தினி.
அடுத்ததாக ஜனனியின் அப்பத்தா குடும்பத்தினர் வர குணசேகரன் என் பொண்ணு யார் கூட இருக்கான்னு எனக்கு தெரியும் என் பொண்டாட்டி தான் அனுப்பி வச்சிருப்பா என்னை சொல்கிறார்.
