பார்க்கிங் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
ஏற்கனவே எஸ்.டி.ஆர் 49 படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு படம் நின்று போனது அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கதை கூறி அவருக்கு பிடித்திருந்ததாக சொன்ன நிலையில் அவரும் இறுதியில் சிபி சக்கரவர்த்தியை இயக்குனராக தேர்வு செய்தார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


