மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 2 என் இரண்டு பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிம்புவை வைத்து தக் லைஃப் என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க போவதாகவும் இந்த கூட்டணிக்கு ஒரு முடிவே இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திரைக்கதை எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது ஏற்கனவே மணிரத்னத்துடன் சேர்ந்து தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் திரை கதையை படித்து வருவதாக விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கென ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது வழக்கம் இந்த படம் குறித்து அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


