அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் தீவிரமான ஃபேன் பாயான ஆதிக் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தக் கூட்டணியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் 64 படத்தை ஆதிக் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் அஜித் 64 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் இந்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதாவது குட் பேட் வெற்றிக்குப் பிறகு சார் எனக்கு கொடுத்திருக்காரு. அந்த ரெஸ்பான்சிபிலிட்டியோட ஒர்க் பண்ணி இருக்கோம் என்று கூறி இருக்கிறார். இந்தத் திரைப்படம் கண்டிப்பாக ஸ்பெஷல் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிந்ததாகவும் ஷூட்டிங் தொடங்க லொகேஷன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார். சினிமாவை எந்த அளவுக்கு சார் நேசிக்கிறாரோ அதே அளவுக்கு பேஷனையும் நேசிக்கிறார் இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


