“ரவி மோகனின் வாழ்க்கையை நான் கெடுத்தேனா?” – கண்ணீருடன் விளக்கம் அளித்த கெனிஷா

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கும் விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்த மனு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இதனிடையே, ரவி மோகனின் தோழி கெனிஷாவே இந்த பிரிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. பல மாதங்களாக தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்தும், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்த கெனிஷா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில், “என்னை பற்றி முழுமையாக அறியாமல் விமர்சிக்க வேண்டாம். ரவி மோகனின் குடும்பத்தை நான் கெடுத்தேனா? உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும், தனது சிறுவயது வாழ்க்கை குறித்து உருக்கமாக பகிர்ந்த அவர், “நான்கு வயதிலிருந்தே குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டேன். என் பெற்றோர் இருவரையும் இழந்தேன். இளம் வயதில் நடந்த திருமண வாழ்க்கையும் கொடுமைகளால் நிரம்பியதாக இருந்தது. குடும்ப வன்முறையால் கருச்சிதைவும் ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார்.

“இந்த எல்லா துயரங்களிலிருந்தும் மீண்டு வரவே நான் பல போராட்டங்களை சந்தித்தேன். அம்மா, அப்பா, குழந்தை என அனைத்தையும் இழந்த நான், மற்றொருவரின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ரவி மோகனைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து நேரடியாக பதிலளித்த கெனிஷா, “அவர் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது சிகிச்சைக்காக என்னை அணுகினார். அதன்பிறகுதான் எங்கள் நட்பு தொடங்கியது. ரவி மோகன் குழந்தை இல்லை. தனது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தெரிந்தவர். அப்படி இருக்கும்போது ஏன் என்னை மட்டும் குற்றம்சாட்டுகிறீர்கள்?” என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “சமூகத்தில் பேச வேண்டிய உண்மையான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசுங்கள்,” என்றும் கெனிஷா தனது வீடியோவில் கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

12 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

12 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

12 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

14 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

15 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

17 hours ago