ஐகோர்ட்டின் உத்தரவை அலட்சியப்படுத்திய விஷால். வார்னிங் கொடுத்த ஐகோர்ட்

மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இருநீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட இடைக்கால தடையும் விதித்தது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, அவரது சொத்துக் கணக்கு, வங்கி கணக்கு விவரங்களை 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், கடந்த 19-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஷாலை நேரில் ஆஜராக மீண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் ஆஜராகினார். அவர் தரப்பில் இளம் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ”19-ந்தேதி சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்ய உத்தர விட்டும், தாக்கல் செய்யவில்லை. வக்கீல்களும் ஆஜராகவில்லை. இந்த ஐகோர்ட்டின் உத்தரவை விஷால் வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறார். இந்த ஐகோர்ட்டை பொறுத்தவரை அனைவரும் சமம்தான். பெரியவர், சின்னவர் என்ற பாகுபாடு கிடையாது. அதனால், விஷால் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பேன்” என்று எச்ரிக்கை செய்தார்.

அதற்கு வக்கீல், நேற்று அனைத்து விவரங்களும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என் றார். உடனே நீதிபதி, அதற்கான ஆதாரம் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

Court warning to actor Vishal
jothika lakshu

Recent Posts

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

55 minutes ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

1 hour ago

‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் மிரட்டல் தோற்றம் வெளியீடு!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…

1 hour ago

“அமீர் கானால் கூட முடியாது!” – ‘ட்ரெய்ன்’ பட விழாவில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…

1 hour ago

வெளியாகிறது ‘தி ஒடிஸி’ மேக்கிங் வீடியோ – எந்த ஓடிடியில் தெரியுமா?

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமரின்…

2 hours ago

Don’t Trouble the Trouble Teaser

Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti

23 hours ago