விவாகரத்து நோட்டீசால் கண்கலங்கும் கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் அஞ்சலி கண்ணம்மாவின் வீட்டில் இருந்து வீட்டுக்கு போனதும் கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்தததை பார்த்து லட்சுமி கண் கலங்கி அழுததை அவளை சமாதானப்படுத்த முடியவில்லை என கூறுகிறார். எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு என அஞ்சலி சொல்கிறார்.

இந்த நேரத்தில் சௌந்தர்யாவுக்கு போன் அடிக்க கண்ணம்மா தான் என சொல்லி போனை அட்டென்ட் செய்ய லட்சுமி கதறி அழுகிறார். கோர்ட்டிலிருந்து அம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் வந்திருக்கு. கோர்ட்டில் விவாகரத்து கிடைத்து விட்டால் அதன் பிறகு அப்பாவும் அம்மாவும் எப்போது ஒன்று சேர முடியாது என அஞ்சலி சித்தியும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நான் அம்மா அப்பா எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டும். அப்பா அம்மாவுக்கு விவாகரத்து கொடுக்கக் கூடாது என கூறி அழுகிறார். நீங்க அப்பா கிட்ட பேசுங்க, நீங்க சொன்னா அப்பா கண்டிப்பா கேட்பாரு என லட்சுமி கூறுகிறார். இதைக் கேட்ட சௌந்தர்யா நான் கண்டிப்பா உன் கிட்ட பேசுறேன் விவாகரத்து கொடுக்காத மாதிரி நான் செய்கிறேன் என்று வாக்குக் கொடுக்கிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா லட்சுமி படித்துக்கொண்டிருக்கும்போது படிச்சு முடிச்சிட்டியா இந்தா கேள்விகளை எழுதி வைத்திருக்கேன். பதில் எழுது என சொல்லி புத்தகத்தை வாங்கிக் கொண்டு செல்கிறார். ஆனால் லட்சுமி எல்லாத்தையும் தப்பு தப்பாக எழுதி இருக்க கண்ணம்மா ஏன் இப்படி தப்பு தப்பா எழுதி இருக்க என கேட்க, எனக்கு மனசு சரியில்ல அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்காரு, விவாகரத்து கிடைச்சுட்டா அப்புறம் அப்பா எப்போதுமே நம்ப வாழ்க்கையில வரமாட்டார் என கூறி கதறி அழுகிறார். இதெல்லாம் பெரியவங்க விஷயம் நான் பார்த்துக்கிறேன் என கண்ணம்மா சொல்ல லட்சுமி விடாமல் அழ அவரை சமாதானப்படுத்துகிறார்.

அதன் பிறகு இந்தப் பக்கம் வெண்பா அடக்க ஒடுக்கமாக புடவையை கட்டிக் கொண்டு பொண்ணு பார்க்க வருவதால் ஹோட்டலுக்கு கிளம்பி வந்து சர்மிளாவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி ட்ராமா போடுகிறார். ஷர்மிளா நல்ல விஷயமா சொன்னேன் என சொல்லி சாந்தியை கூட சென்று வருமாறு அனுப்பி வைக்கிறார்.

இந்த பக்கம் பாரதி வீட்டில் தயாராகிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த ஹேமா இன்னைக்கு மதியம் சீக்கிரமா வந்திடுங்க இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என கூறுகிறார். என்ன சாப்பிட ஈஸியான கேட்க எங்க ஸ்கூலில் பேச்சுப் போட்டி நடந்தது அதில் நான் தான் ஃபர்ஸ்ட் பிரைஸ், அதுக்குதான் இன்னிக்கி பிரைஸ் கொடுக்கப் போறாங்க என கூறுகிறார். என்னடா டாபிக் என பாரதி கேட்க அது சர்ப்ரைஸ் என சொல்லி விடுகிறார். ரவுடி தான் பேச்சுப்போட்டி எல்லாம் நல்லா பேசுவாரு அவர் கலந்துகலையா என கேட்க இல்லை என கூறுகிறார்.

ஏன் என பாரதி கேட்க டாபிக் அந்த மாதிரி என கூறுகிறார். என்ன டாபிக் என கேட்டேன் சிறந்த டாடி என்னுடைய அப்பா என்பதுதான். அவதான் அவர் அப்பாவை பார்த்ததே இல்லையே அதனால என்ன பேசறதுன்னு தெரியல என கலந்துகொள்ளவில்லை என கூறுகிறார். பாவம் டாடி அவ ரொம்ப வருத்தப்பட்டு பேசினேன் என ஹேமா சொல்ல மத்தவங்க கதை எல்லாம் நமக்கு எதற்கு என பாரதி கோபப்படுகிறார். உடனே சமையல் அம்மா என்கிட்ட எவ்வளவு வந்தா இருக்காங்க நீங்க ஏன் அவங்கள பத்தி பேசினா இப்படி கோபப்படுறீங்க என கேட்க பாரதி சாரி கேட்கிறார். பிறகு சரி நீ கீழ வெயிட் பண்ணு நான் வந்துவிடுகிறேன் என கூறுகிறார்.

பிறகு பாரதி ரவுடிக்கு எங்கப்பா பாரதிதான் என யாரும் சொல்லாமல் இருக்கணும். கண்ணம்மாவை கூட சமாளித்து விடலாம் ஆனால் ரவுடியை சமாளிக்க முடியாது. அவளைப் பொறுத்தவரை அவங்க அப்பா வர மாட்டாங்கன்னு இருக்கணும், அதுதான் நல்லது என நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

Yaar Yaarival Video Song

Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…

2 minutes ago

Rippipee Lyrical Video

Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…

23 hours ago

Sing Geetham Tamil Trailer

Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…

1 day ago

Maaya Kanavo Video Song

Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…

1 day ago

“அவன் விஷால் மாதிரியே இருக்கான்!”-ஆர்யா உடைத்த ‘அவன் இவன்’ படப்பிடிப்பு தளத்தின் ரகசியம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…

1 day ago

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…

1 day ago