தமிழ் சின்னத்திரையில் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த விவாதங்கள் தற்போது வரை முடிவுக்கு வந்த பாடில்லை.
இந்த நிலையில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பற்றி அவரது காதலி தன்னிடம் பேசியதாக யுகேந்திரன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது நல்லது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக கூறியதாக பேசி உள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் பிரதீப் வருவதற்கு வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது.


