போட்டுக் கொடுத்த பாக்கியா.‌. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

விமலா பழனிச்சாமியிடம் போட்டு கொடுத்துள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் ஜெனி என இருவரும் வாக்கின் வந்திருக்க ஈஸ்வரி உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஷாக்காகின்றனர்.

இருவரும் ஈஸ்வரி கண்ணில் படாமல் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய ஈஸ்வரி இவர்களை பார்த்து விடுகிறார். பிறகு ஜெனியை பார்த்து என்ன ட்ரெஸ் இது என்று கேட்க வர கோபி அங்கு வந்து ஜெனி இடம் நலம் விசாரிக்கிறார். பிறகு பாக்கியா கோபி சென்ற பிறகு என்ன அத்தை நைட் எல்லாம் தூங்கலையா? உங்க கண்ணு செவந்து போய் இருக்கு என்று ஈஸ்வரியை பேச விடாமல் பேச நீ பேச்ச மாத்தாத என்ன டிரஸ் இது என்று கேட்க இதில் என்னத்த இருக்கு நாம புடவை கட்டிய பழகிட்டும் அவ ஃப்ரீயா டிரஸ் போடட்டுமே என்று சொல்ல இதெல்லாம் உன் வேலை தான் என்று ஈஸ்வரி கேள்வி கேட்க ஆமாம் என்று சொல்கிறார்.

நான் இல்லைனதும் உன் இஷ்டத்துக்கு ஆடுறியா என்று கேட்க ஆமா அப்படித்தான் ஆடுவேன் உங்களுக்கு பொறாமையா இருந்தா நீங்க வீட்டுக்கு வந்துருங்க என்று சொல்ல நான் என் பையனோட தான் இருப்பேன் என்று ஈஸ்வரி பதில் கூறுகிறார். பிறகு உனக்கு ரெஸ்டாரண்டுக்கு டைம் ஆகலையா கலந்து என்று சொல்கிறார் குழந்தைக்கு பால் கொடுக்க வேணாமா கிளம்பு என்று ஜெனியையும் அனுப்பி விடுகிறார்.

அதன் பிறகு கோபி வந்ததும் ஈஸ்வரி கமலா பேசி அனைத்தையும் சொல்ல கோபி நீங்க வாங்கமா இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று வீட்டுக்கு அழைத்து வந்து கமலாவை கூட்டி வைத்து மயூவிடம் பேசும்போது எங்க அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி நீங்க பேசினீங்களா என்று கேள்வி கேட்க கமலா நான் அப்படி எதுவும் பேசல என்று பொய் சொல்ல ஈஸ்வரி சத்தியமா இவ பேசினா என்று சொல்கிறார். எங்க அம்மா பொய் சொல்ல மாட்டாங்க என்று கோபி ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக பேசி கமலாவை திட்டிவிட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு ராதிகா நீ அப்படி சொன்னியாமா என்று கேட்க கமலா இல்லை என்று சொல்ல மயூவை கூப்பிட்டு விசாரிக்க மயூ உண்மையை சொல்லிவிட ராதிகா அம்மாவை பிடித்து திட்டுகிறார். அடுத்ததாக பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது பாரை வைத்தவர் கடையை காலி செய்து கொண்டிருக்க பாக்யா கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு அவர் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்.

அது எப்படி சார் தர முடியாதுன்னு சொல்லலாம் என்று பாக்கியா சத்தம் போட்டு சண்டையிட அவர் உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க நான் பணத்தை தரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க பழனிச்சாமி என்ட்ரி தருகிறார். என்னங்க என்ன பிரச்சனை என்று கேட்டு பாக்கியாவை உள்ள அனுப்பிவிட்டு பார் கடைக்காரரிடம் எதையோ பேச அவர் பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு என் கடையை காலி பண்ணிட்டீங்களா சந்தோஷமா இருங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.

பழனிச்சாமி யாரோ கம்ப்ளைன்ட் கொடுத்து காலி பண்ண வச்சிருக்காங்க என்று சொல்ல பாக்கியா சார் உங்களுக்கு இதுல எதுவும் தொடர்பில்லையே என்று கேட்கிறார். பழனிச்சாமி நான் எதுவும் செய்யல என்று சொல்கிறார். பிறகு வீட்ல இருக்கறவங்கள நலம் விசாரித்து விட்டு விமலை இனியாவோட காலேஜ்ல பார்த்தேன் என்று போட்டுக் கொடுக்கிறார். பழனிச்சாமி நான் அவன் கிட்ட இத பத்தி பேசுறேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Suresh

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

3 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

3 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

3 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

3 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

3 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

3 days ago