மண்டபத்திற்குச் சென்ற பாக்யா. மண்டபத்தைப் பார்த்து வாய் அடைத்துப் போன செல்வி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அத்தை மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டில் உள்ள அமிர்தா மற்றும் ஜெனி ஆகியோரிடம் வீட்டை பத்திரமா பாத்துக்கங்க என்று சொல்லி கிளம்ப ஏழில் நீ சமைக்கிற வேலையை மட்டும் பாருமா மூணு நாள் தானே எங்களை நாங்க பாத்துக்குறோம் என சொல்லி வழி அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு பாக்யா, செல்வி என எல்லோரும் பாண்டிச்சேரி ஹோட்டலில் வந்து இறங்குகின்றனர். செல்வி பெரிய ஹோட்டலை பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்கிறார். பிறகு பழனிச்சாமிக்கு போன் செய்து வந்து விட்டோம் என்ற விஷயத்தை சொல்ல அவர் நானும் வந்துகிட்டே இருக்கேன், மேனேஜர் கிட்ட சொல்லி இருக்கேன் அவர் உங்களை கூட்டிட்டு போய் தங்க வைப்பார் என சொல்ல கொஞ்ச நேரத்தில் மேனேஜர் வந்து பாக்யா மற்றும் டீமை அழைத்துச் சென்று தங்க வைக்கிறார்.

பிறகு பழனிச்சாமி வந்து இறங்க அவருடைய நண்பர் சுதாகர் அவரை வரவேற்று சந்தோஷப்பட குடும்பத்தார் எல்லோரும் பழனிச்சாமியிடம் நலம் விசாரிக்கின்றனர். பிறகு பாக்யாவும் செல்வியும் வந்து பழனிச்சாமியை சந்திக்க அவர் இருவரையும் நலம் விசாரித்து விட்டு சுதாகரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த இவர்களை பார்த்த சுதாகர் இவங்க சமைச்சிடுவாங்களா என சந்தேகப்படுகிறார்.

சுதாகரின் மனைவி பெரிய லிஸ்ட் எடுத்து கொடுத்து இதெல்லாம் இன்னிக்கு சமைக்கணும் என சொல்கிறார். பிறகு சுதாகரும் சுதாகர் மனைவியும் இவங்களை பார்த்தா சந்தேகமா இருக்கு, சமைத்து விடுவார்கள் என கேட்க பழனிச்சாமி அது பற்றி கவலைப்படாதீங்க பிரமாதமா சமைப்பாங்க என்று சப்போர்ட் செய்கிறார்.

அதன் பிறகு பாக்யா தன்னுடைய டீமை பிரித்து யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை கொடுக்கிறார். மறுபக்கம் கோபியும் ராதிகாவும் காரில் இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டு சந்தோஷமாக கல்யாண மண்டபத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

Baakiyalakshmi Serial Episode Update 29.06.23
jothika lakshu

Recent Posts

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

18 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…

19 hours ago

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…

19 hours ago

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…

19 hours ago

“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…

19 hours ago

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

2 days ago