சுதாகரை மிரட்டிய பாக்யா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுதாகர் பாக்யாவிடம் இனிமே இது சுதாகரோட ரெஸ்டாரன்ட் என்று சொல்லுகிறார் இந்த ரெஸ்டாரன்ட்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சம்பந்தம் என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு பேசுகிறார். அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரு ரெஸ்டாரன்ட் இப்படிதான் மத்தவங்க வயித்துல அடிச்சு வாங்கினீங்களா என்று கேட்க சுதாகர் வார்த்தையை மீறி பேசுறீங்க என்று சொல்லுகிறார். உடனே வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கின எனக்கு என் பேர்ல எழுதிக்க எவ்வளவு நேரம் ஆகும் அப்படி நான் செய்யலையே இனியா பேருலதானே எழுதன என்று சொல்லுகிறார்.

அதற்கு பாக்கியா ஒரு ரெஸ்டாரன்ட்காக பையனோட வாழ்க்கையே அடமானம் வச்சிருக்கீங்க என்று சொல்ல சுதாகர் என்ன சம்மந்தி பேசிக்கிட்டே இருக்கீங்க இது சரி இல்லை என்று சொல்லுகிறார் நான் அப்படி தான் சொல்லுவேன் அதுதான் உண்மை என்று சொல்ல அதற்கு சுதாகர் உங்க பொண்ணு என் வீட்டுல வாழலாம் என்று மறந்துவிட்டு பேசுறீங்களா சம்பந்தி என்று கேட்க அதற்கு பாக்யா ரெஸ்டாரன்ட் கூட நான் விட்டுவிடுவேன் எவ்வளவு பேருக்கு எவ்வளவு விட்டுக் கொடுத்துட்டேன் அது மாதிரி உங்களுக்கு பிச்சை போடறதா நினைச்சுக்கிறேன் என்று சொல்ல சுதாகர் கோபப்படுகிறார். ரெஸ்டாரன்ட் போனா எனக்கு பிரச்சனை இல்ல ஆனா என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஒன்னுனா யாராயிருந்தாலும் நான் சும்மா விடமாட்டேன் என மிரட்டுகிறார். உடனே கடுப்பான சுதாகர் இவங்க கிட்ட பேசுறது வேஸ்ட் நாளைக்கு யாரும் இவங்க இங்க இருக்கக்கூடாது. இன்னைக்கு நைட்டோட இவங்க காலி பண்ணிட்டு போயிடனும் என்னோட சொந்தக்காரங்க சம்பந்தி அப்படின்னு சொல்லிக்கிட்டே யாராவது இருந்தா யாரை விடாதீங்க அடிச்சு வெளியே தொறத்துங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் பாக்கியா சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க வேலை செய்யும் ஆட்கள் வந்து இந்த வேலையால் தான் எங்களுக்கு குடும்பம் போகுது நாங்க இப்ப என்ன அக்கா பண்றது எனக்கு பேசிக் கொண்டிருக்க செல்வி உங்களுக்கு அது வேலைதான் போச்சு அக்காவுக்கு ரெஸ்டாரன்ட் போயிடுச்சு என்று சொல்லி விடுக்கா ஒரு வாசல் மூடுனா ஒரு வாசல் திறக்கும் நீ கவலைப்படாதே என்று அட்வைஸ் கொடுக்க பாக்யா அவர்களிடம் என்னோட கஷ்டமான நேரத்துல நீங்க கூட இருந்திருக்கீங்க அதனால உங்களை எப்படியோ போங்கன்னு விட முடியாது நீங்க பழைய ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு வந்துருங்க என்று சொல்ல செல்வி அங்க ஆல்ரெடி வேலை செஞ்சுகிட்டு இருக்காங்களே என்று சொல்லுகிறார் இருக்கட்டும் செல்வி நம்ம நிலைமை இப்படியே மாறாது அடுத்தடுத்து ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணவும் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் நீங்க கிளம்பலாம் என்று சொல்ல அவர்கள் சென்று விடுகின்றனர் பாக்யா செல்வி மற்றும் இருக்க பாக்யா அழுது கொண்டே இருக்க செல்வி ஆறுதல் சொல்லுகிறார்.

இந்த ரெஸ்டாரன்ட்ல எல்லா பொருளும் நான் பார்த்து பார்த்து வாங்கினேன் ஆனா இன்னைக்கு எனக்கு உரிமை இல்லாம ஆயிடுச்சு என்று சொல்லி கண்கலங்கி ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் என்ற போர்டை பார்த்து அழுது கொண்டே இருக்க செல்வி அவரை ஆறுதல் படுத்தி வெளியில் அழைத்து செல்கிறார். சுதாகர் ஆட்கள் ரெஸ்டாரண்டை பூட்டி எடுத்து சென்று விடுகின்றனர்.

பாக்யாவும்,செல்வியும் நடந்து கொண்டு வர ஆரம்பத்தில் மசாலா அரைத்து வித்த விஷயம் முதல் ரெஸ்டாரன்ட் தொடங்கியது வரை நடந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு வர பாக்யா ஒரு இடத்தில் உட்கார்ந்து விடுகிறார் நமக்கு என்ன தெருவுல நிற்கிறது புதுசா செல்வி என்று கேட்டு கண்டிப்பா இதிலிருந்து நான் வெளியே வருவோம் என்று சொல்லுகிறார் ஆயிரம் இருந்தால் இனிய பாப்பா அந்த வீட்டில் வாழுது. நான் அப்படி சொல்லக்கூடாது தான் வயித்தெரிச்சலா இருக்கு அடுத்தவங்க வயித்துல அடிச்சு சம்பாதிச்சா நல்லாவே இருக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார். நீ வர எல்லாரையும் அந்த ரெஸ்டாரண்டுக்கு வர சொல்லிட்ட சம்பளம் கொடுத்து சமாளிக்க முடியுமா என்று கேட்க பாத்துக்கலாம் செல்வி எல்லா இப்படியே இருந்துடாது எனக்கு யோசிச்சு யோசிச்சு மூளையே வலிக்குது என்று சொல்லுகிறார். வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி பாக்யா வீட்டிற்கு வருகிறார்.

பாக்கியாவிடம் ஈஸ்வரி என்னை கேட்கிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? குடும்பத்தாரின் கேள்வி என்ன? என்பதை எபிசோட் பற்றி தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 23-04-25
jothika lakshu

Recent Posts

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

13 minutes ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

16 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

21 hours ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

21 hours ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

21 hours ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

22 hours ago