baakiyalakshmi serial episode update 19-12-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும் போது இன்னைக்கு பொருட்காட்சியோட பத்தாவது நாள், எல்லோருக்கும் கொடுக்க ஈஸ்வரி எனக்கு வேண்டாம் என சொல்கிறார்.
பிறகு பாக்கியா எல்லாருமே கேன்டீன் வந்துட்டாங்க நீங்க இன்னைக்கு வருவீங்க நாளைக்கு வருவீங்க நான் ஒவ்வொரு நாளும் காத்துக்கிட்டு இருந்தேன் ஆனா இதுவரைக்கும் இங்க வரல என்னைக்காவது எனக்காக வாங்க அத்தை என் மேல இருக்க கோபத்தை எல்லாம் ஒதுக்கி வச்சிடுங்க என்று சொல்லி கூப்பிட எனக்கு கால் ரொம்ப வலிக்குது நான் வரல என ஈஸ்வரி சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.
அதை தொடர்ந்து வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்க இங்கு வரும் அமைச்சர் பாக்யாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவருக்கு மாலை போட்டு ஊக்கப்படுத்தி பாராட்டுகிறார். இதுவரைக்கும் ஒரு பெண் பொருட்காட்சியில் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தியதில்லை. ஒரு பெண்ணாக அதை நீங்க எடுத்து அற்புதமா செய்து முடிச்சு இருக்கீங்க என்று சொல்லி பாராட்டி ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்று சொல்லி பாக்கியாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
பிறகு பாக்கியாவின் கேண்டினை பாராட்டி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க அதைச் செழியன் வீட்டில் போட்டுக் காட்ட ஈஸ்வரி இதைப் பார்த்து கண் கலங்கி சந்தோஷப்படுகிறார். அப்படியே பாக்கியா பக்கம் சாய்ந்த ஈஸ்வரியை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார்.
மேலும் செழியன் இந்த செய்தியை அப்படியே வீடியோவாக எடுத்து ஜெனிக்கு அனுப்பி வைக்க அதைப் பார்த்த ஜெனியும் பாக்யாவுக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்ப ஜெனி மெசேஜ் பார்த்ததும் செழியன் சந்தோஷப்படுகிறார்.
அடுத்ததாக கேண்டினில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க பாக்யா என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் என் கூட நீங்க எல்லாரும் இருந்தது தான் என தேங்க்ஸ் சொல்கிறார். இந்த நேரம் பார்த்து கணேஷ் கேன்டீன் வந்து காபி வாங்கி கொடுக்க அதை பார்த்த பாக்கியா பதற்றமாகி எழில் மற்றும் அமிர்தா என இருவரையும் உடனே இங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி போங்க என்று அனுப்புகிறார்.
இருவரும் கிளம்பிச் சென்ற பிறகு கணேஷ் பாக்கியா அருகே வந்து நான் உங்களுக்கு வாழ்த்து சொல்ல தான் வந்தேன் இப்போதைக்கு யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்க ஒரு மாசம் டைம் கேட்டு இருக்கீங்க அது முடிய இன்னும் 2 நாள் தான் இருக்கு. அதுக்குள்ள நீங்க எதுவும் செய்யலன்னா நானே எல்லாரிடமும் உண்மைய சொல்ல வேண்டியது இருக்கும் என்று வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…
இயக்குநராக பல வெற்றிப் படங்களை வழங்கிய செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்…
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K