Baakiyalakshmi Serial Episode Update 01.03.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டிற்கு வந்த நோட்டீசை பிரித்துப் படிக்குமாறு ஈஸ்வரி சொல்ல அந்த நேரத்தில் பாக்கியா வந்துவிட வேண்டாம் பிரிக்க வேண்டாம் அவர் வந்தால் திட்டுவார். என் பெயர் போட்டு இருக்கேன் அதுல ஒண்ணுமே இருக்காது அன்னைக்கு தான் அவரு ஆபீஸ் விஷயமா கையெழுத்து வாங்கினார் என்று சொன்னேன்ல அதுவாகத்தான் இருக்கும் என கூறுகிறார். கொடுங்க அத்தை அவர் வந்தா கொடுத்து விடலாம் என பாக்கியா அதை வாங்கிக்கொள்கிறார்.
அதன்பிறகு ஜெனி, இனியா மற்றும் எழில் மூவரும் அமர்ந்து கொண்டிருந்த போது ஜெனி இனியாவிடம் பேச இனியா பேசாமல் இருக்கிறார். பிறகு அவர் ரூமுக்குள் எழுந்து சென்று விடுகிறார். எழில் என்ன பிரச்சனை எனக் கேட்க பாக்கியா நடந்ததைச் சொல்கிறார். அதன்பிறகு இனியாவின் ரூமுக்குச் சென்று இந்தியாவிடம் அவருக்கு ஏற்றாற்போல விஷயத்தை எடுத்துச் சொல்கிறார். அதன்பிறகு இனியாவும் அதைப் புரிந்து கொண்டு 21 வயதில் தான் காதலிப்பேன் என சொல்கிறார். பின்னர் ஜெனியும் இனியாவும் சகஜமாகி விடுகின்றனர்.
கோபி ரூமுக்குள் இருக்க அப்போது அவருக்கு ராதிகா போன் செய்து வீட்டிற்கு விவாகரத்து நோட்டீஸ் வந்திருக்கும் வக்கீல் சொன்னார் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்லுங்க என கூறுகிறார். உடனே பதறிப்போன கோபி யார் வாங்கியது என தெரியாமல் கீழே பதறி ஓடுகிறார். கீழே எல்லோரும் இருப்பதை பார்த்து அவர் எப்படி கேட்பது என தயங்குகிறார்.
கோபியை பார்த்த பாக்கியா என்னங்க ஏதாவது வேணுமா எனக் கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறி விடுகிறார் அதன் பின்னர் கோர்ட்டில் இருந்து ஏதாவது லெட்டர் வந்ததா என கேட்கிறார். ஆமாம் வந்தது என பாக்கியா சொல்கிறார் அதைக் கொடு ரொம்ப முக்கியமானது என கேட்கிறார். விடலைப் தேடிய பாக்கிய எங்கே வச்ச நினைத்து தெரியவில்லை எனக் கூற கோபிக்கு பிபி இருக்கிறது. ஜெனி, பாக்கியா என இருவரும் நோட்டீசை தேடுகின்றனர். கோபி பதற்றப்படுவதை பார்த்து எழிலுக்கு சந்தேகம் வருகிறது.
பிறகு பாக்கியா நோட்டீசை எடுத்து வந்து கொடுக்க நான் மேலே போகிறேன் வக்கீல் போன்ல வெயிட் பண்ணிட்டு இருக்காரு என சொல்கிறார். நல்லவேளை யாரும் பிரித்துப் பார்க்கல என ரூமுக்குப் போய் நிம்மதி அடைகிறார் கோபி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் நாளைக்கு இயரிங் இருக்கு, நீங்களும் உங்கள் மனைவியும் கோர்ட்டுக்கு வந்து ஒரே மாதிரி பதில் சொல்லணும் என வக்கீல் கூறுகிறார். கோபி பாக்கியாவிடம் நாளைக்கு நீ என்கூட கோர்ட்டுக்கு வரணும் என கூறுகிறார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…