தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவை பிடித்து திட்டுகிறார். இனியா சாரி மா பிரெண்ட்ஸ் கம்பெல் பண்ணாங்க, அதனால தான் போனேன் என்று சொன்னதும் பிரான்ஸ் கம்பெல் பண்ணா உனக்கு அறிவு எங்க போச்சு என்று திட்டுகிறார்.
நம்முடைய நல்ல நேரம் எதுவும் ஆகல ராதிகா மட்டும் அங்கு வரலைன்னா நீ எங்க இருந்திருப்ப? நாளைக்கு உனக்கு காலேஜ்ல டிசி கொடுத்து இருப்பாங்க இதெல்லாம் உனக்கு தேவையா என்று கோபப்படுகிறார்.
நீ எங்க போனாலும் உன் கூடவே வந்து நீ என்ன பண்றன்னு பார்த்துட்டே இருக்கணுமா? போகக்கூடாதுன்னு சொன்னா நாங்க பழைய ஆளா தெரிவோம் நம்பி அனுப்பி வச்சா இந்த மாதிரி பிரச்சனையை கொண்டு வருவீங்க நாங்க என்னதான் பண்றது என தலையில் அடித்துக் கொள்கிறார்.
ஈஸ்வரி எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் என்று செழியனை திட்டுகிறார். செழியன் நீங்க பயப்பட கூடாதுன்னு தான் சொல்லாமல் இருந்திருப்பான் என்று எழில் சொல்ல ஈஸ்வரி கோபப்பட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் என்னாச்சு என்ன பிரச்சனை என்று கேட்க ராதிகா பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்க பாக்கியா வீட்டிற்கு கிளம்பி வர கதவு பூட்டி இருப்பதை பார்த்து இனியாவுக்கு போன் செய்கிறார்.
அதன் பிறகு இனியா போன் சுவிட்ச் ஆப் என வருவதை பார்த்து செழியனுக்கு போன் போட்டு விசாரிக்க வெளிய வந்த செழியன் நடந்த விஷயத்தை சொல்ல வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவை நினைத்து பெருமைப்படுகிறார். பிறகு ராதிகாவுக்கு நன்றி சொல்ல ரூம் கதவைத் தட்ட ராதிகா திறக்காமல் அமைதியாகவே இருக்கிறார்.
அடுத்து பாக்யா தண்ணீரை எடுத்துக் கொண்டு ரூமுக்கு வர அழுது கொண்டு இருந்த இனியா கண்களை துடைத்துக் கொண்டு தூங்குவது போல் இருக்க பாக்கியா இனியாவின் தலையை கோதி விட இனியா கண் திறந்து அம்மாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.
பிறகு மீண்டும் மன்னிப்பு கேட்க பாக்கியா பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னா எங்க வேணாலும் போய்டுவியா நாளைக்கு விஷத்தை கொண்டு வந்து கொடுத்து கம்பல் பண்ண குடிச்சிடுவியா என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…