நிதிஷ் கேட்ட கேள்வி,கண்கலங்கி நிற்கும் இனியா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட,சந்திரிகா கேள்வி கேட்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்திஷ் இனியாவிடம் அந்த ஆகாஷ் உன்னோட எக்ஸ் தான என்று கேட்க இனியா அதிர்ச்சி அடைகிறார். எனக்கு தெரியும் நீ போய் டிரஸ் மாத்திட்டு வா போ என்று சொல்லிவிட்டு போக டிரஸ் மாத்தி கொண்டு வந்தவுடன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே எங்கேயாவது போய் இருக்கீங்களா என்று கேட்க அதெல்லாம் ரொம்ப இல்லை என்று சொல்லுகிறார் நான் அவன் கூட பேசறதே கிடையாது என்று சொல்ல பொய் சொல்லாத நான் வரும்போது அவன்கிட்ட பேசிகிட்டு தானே இருந்த என்று சொல்ல நல்லா இருக்கான்னு கேட்டேன் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.

அவன் நல்லா இருந்தா உனக்கு என்ன நல்லா இல்லனா உனக்கு என்ன நீ எதுக்கு கேக்குற என்று கோபப்பட இனியா மீண்டும் அதிர்ச்சியாகிறார்.பிறகு படுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு நீ அதை தூங்கிக் கொண்டிருக்கும் போது நிதிஷ் போதையில் வருவது போல வந்து இனியா பக்கத்தில் வந்து மெதுவாக கூப்பிட இனியா அலறி எழுந்து கொள்கிறார். உடனே தூங்கிட்டியா சரி படுத்துக்கோ என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்து அப்படி இருக்காது அப்படித்தான் இருக்கும் என சைக்கோ போல நடந்து கொள்கிறார். இதனைப் பார்த்து இனியா கண்கலங்க பாக்யா கனவில் இனியா அழுவது போல வர அவரும் இனியா எனக் கத்தி எழுந்து கொள்கிறார்.

மறுநாள் காலையில் நித்திஷ் அப்பா அம்மாவிடம் விஷயத்தை சொல்ல சுதாகர் இதை பத்தி நீங்க ரெண்டு பேரும் எதுவும் பண்ணிக்காதீங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க இனியா வந்து உட்கார்ந்து குட் மார்னிங் சொல்ல சுதாகர் தலையசைக்கிறார் பிறகு நிதிஷ் அம்மாவிடம் பேச அவர் எதுவும் சொல்லாததால் உடனே நித்திசை பார்த்து அவர் கோபமாக எழுந்து சென்று விடுகிறார் நிதிஷ் அம்மா இனியாவிடம் சுதாகரை பேச விடாமல் கண் காட்டி அழைத்துச் சென்று விடுகிறார். இனியா ஏதாவது கேட்டா கூட பதில் சொல்லலாம் எதுவுமே பேசாம போறவங்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்று யோசிக்க பாக்கியா போன் போட்டு பேசுகிறார். நீ நல்லா இருக்க இல்ல நீங்க ஏதோ பிரச்சினை இல்லை என்று சொல்ல நான் நல்லா தான்மா இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கேன் உன் பிரச்சனை இல்லை என்று சொல்லுகிறார் பிறகு பாக்யாவிற்கு ஹோட்டலில் வேலை இருக்கா நான் அப்புறம் பேசுறேன் இனியா என்று சொல்லி போனை வைக்கிறார்.

மறுபக்கம் அனைவரும் சாப்பிட உட்கார இனியாவை கூப்பிடாமல் இருக்கின்றனர். இதனால் இனியா லேட்டாக வர வந்த பிறகு இனியாவிடம் எதுவும் பேசாமல் மூவரும் அமைதியாக சாப்பிடுகின்றனர். வேலை செய்யும் பெண்மணி சாப்பாடு பரிமாற போக சந்திரிகா அவருக்கு வேறு வேலை கொடுத்து அனுப்பி வைக்கிறார் இனியாவே சாப்பாடு போட சாப்பாடு சந்திரிகா அதையும் தடுத்து மற்றவர்களுக்கு பரிமாற எதுக்கு என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க ஒன்று கேட்கிறார்.அப்பொழுதும் எதுவும் பேசாமல் இருக்க நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா என்று கேட்க நான் கேட்டிருப்பேன் ஆனால் இவர் தான் எதையும் கேட்காதே என்று சொல்கிறார் என்று சொல்லிவிட்டு நிதிஷ் பார்த்த விஷயத்தையும் கேள்விப்பட்ட விஷயத்தையும் சொன்னால் நீ அன்னைக்கு ரெஸ்டாரன்ட் விஷயத்தில் அவ்வளவு பேசின உன்ன புடிச்சிருக்குன்னு உன் சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உன்ன கல்யாணம் பண்ணனும் பணம் காசுக்காக நகைக்காக இல்லை நல்ல பொண்ணுன்னு தான் நினைச்சோம் அதுவும் இப்ப இல்லையென்று சொல்ல இனியா எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார் நான் தான் உன் அமைதியா இருக்க சொன்னேன்ல என்ற சுதாகர் கேட்க என்னோட ஆதங்கத்தை அடக்க முடியல என்று சொல்லி விடுகிறார்.

மறுபக்கம் பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க மூவர் சாப்பிட வருகின்றனர் அவர்கள் என்ன சொல்லுகின்றனர்?அதற்கு பாக்யாவில் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


baakiyalakshimi serial episode update 05-06-25
jothika lakshu

Recent Posts

Run Official Trailer

Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…

4 days ago

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

4 days ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

4 days ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

4 days ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

4 days ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

4 days ago