தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமி வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து பேச அப்போது அவர் பணத்தேவை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கூறுகிறார். ஆனால் பாக்கியா அதெல்லாம் எதுவும் வேண்டாம் சார் நானே சமாளிக்க வேண்டும் என்று இருக்கிறேன் என கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து வீட்டில் எழில் மற்றும் அமிர்தா இருவரும் வெளியே கிளம்ப பைக்கில் நெருக்கமாக செல்வதை பார்த்த கணேஷ் அவர்களை பார்த்து ஆவேசப்பட பிறகு வெளியே வந்த பாக்கிய கணேஷ் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கணேஷ் அங்கிருந்து ஓடி விடுகிறார்.
பிறகு பார்க்கிற்கு வந்த கணேஷ் அங்கு நிலாவுடன் வந்த ராமமூர்த்தியிடம் அனுமதி கேட்டு நிலாவுடன் விளையாடுகிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா செல்விக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.
பிறகு கேண்டினில் இருந்து வரவேண்டிய பணம் வந்தால் கொஞ்சம் உதவியா இருக்கும் எனவும் சொல்ல அமிர்தா நான் பெயில் போடறேன் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம் என கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த கணேசன் அப்பா அம்மா கணேசுக்கு போன் போட்டு நாங்க சமையல் வந்திருப்போம் உன்ன பாக்கணும் நீ எங்க இருக்குன்னு சொல்லு என கேட்டு கணேசை பார்க்க கிளம்பி வருகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


