ஆகஸ்ட் 16 1947 திரை விமர்சனம்

தமிழ் நாட்டில் செங்காடு எனும் கிராமத்தில் பருத்தி நூல் உற்பத்தி செய்யும் வேலையை பிரதான தொழிலாக கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில், அந்த கிராம மக்களின் உழைப்பை அதிக அளவில் சுரண்டி அவர்களை அடிமைகளாக நடத்துகின்றனர். செங்காடு ஊரின் பிரிட்டிஷ் தளபதி, வேலை நேரத்தைவிட அதிக நேரம் அவர்களின் உழைப்பை வாங்கிக் கொண்டு சுயலாபம் பெற்று வருகிறார். சுதந்திரம் கிடைக்க போகும் விஷயம் அந்த ஊர் மக்களுக்கு தெரியாத அளவுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர்.

மறுபுறம் பிரிட்டிஷ் தளபதியின் மகன் அந்த ஊர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறான். அவனிடம் இருந்து பெண்களை பாதுகாப்பதே ஊர் மக்களுக்கு பெரிய கவலையாக உள்ளது. தங்களின் பெண் குழந்தைகளை இறந்துவிட்டதாக தெரிவித்து அவர்களை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருகின்றனர்.

இதனிடையே ஊர் மக்கள் திருடனாக நினைத்திருக்கும் கவுதம் கார்த்திக், அந்த ஊர் தலைவரின் மகளை சிறுவயதிலிருந்தே ஒருதலையாக காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கவுதம் கார்த்திக் காதலிக்கும் பெண்ணிடம் பிரிட்டிஷ் தளபதியின் மகன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். இறுதியில் அவரிடமிருந்து அந்த பெண்ணை கவுதம் கார்த்திக் காப்பாற்றினாரா? அடிமைகளாக இருக்கும் மக்களை மீட்டாரா? இல்லையா? அந்த ஊர் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த விஷயம் தெரிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் கார்த்திக்கு இந்த படம் அவரின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. அந்த அளவுக்கு நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். அடிமைத்தனத்தை அந்த கிராம மக்களிடம் வசனத்தின் மூலம் எடுத்து சொல்லும் விதத்தில் கவுதம் தேர்ந்த்துள்ளார். காதல், கோபம், உற்சாகம் என அனைத்து உணர்வுகளை சரியாக வெளிகாண்பித்து பாராட்டுக்களை பெறுகிறார்.

அறிமுக நாயகி ரேவதி அவருடைய பணியை அழகாக செய்து முடித்துள்ளார். காதல் காட்சிகளில் கூடுதல் கைத்தட்டல் பெறுகிறார். புகழின் வசன உச்சரிப்பு உடல் மொழி அனைத்தையும் சரியாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் பிற கதாப்பாத்திரங்களின் தேர்வு சிறப்பு.

சுதந்திரத்திற்கு முன் நடந்த அடிமைத்தனத்தை காதல் கலந்த படமாக கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார். கிராமத்தில் நடக்கும் கதையை சுவாரசியமான திரைக்கதையை அமைத்து கவனிக்க வைத்துள்ளார். கதாப்பாத்திரங்களின் தேர்வு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அடிமைத்தனத்திலிருந்து கதாநாயகன் அந்த மக்களை மீட்க போராடும் இடங்களில் வரும் வசனங்களில் இயக்குனர் கைத்தட்டல் பெறுகிறார்.

காட்சிகளின் மூலம் அந்த வாழ்வியலுக்கு கொண்டு செல்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்கே. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் மனதில் நிற்கும் படி இல்லை.

மொத்தத்தில் ஆகஸ்ட் 16 1947 – சுதந்திரம்.

August 16 1947 movie review
jothika lakshu

Recent Posts

என் மீது பழி போடாதீர்கள்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…

10 hours ago

விஜய் குறித்து கேட்ட கேள்வி, கருணாஸ் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…

10 hours ago

பகவதி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட இயக்குனர் வெங்கடேஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

10 hours ago

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை

ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…

16 hours ago

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…

16 hours ago

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…

16 hours ago