‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?
அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இவர், ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கியவர்.
ரூபா மஞ்சரி, வாணி போஜன், முரளி சர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராது இன்ஃபோ டெயின்மென்ட் சார்பில் பெப்சி வி.எஸ்.பாலமுரளி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படம் பற்றி ஜீவா சங்கர் கூறும்போது,
‘ராமேஸ்வரம் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. சரா மற்றும் குட்டி என 2 கதாபாத்திரங்களைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. அந்த 2 கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை பேசும் இப்படம், பழிவாங்கும் கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் சூரி நடிப்பில் ‘மண்டாடி’ படம் உருவாகி, விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம் கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் கதைக்களம் மீனவர்கள் பற்றியது என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…