அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது அதாவது மார்ச் 16 முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இந்த அட்டவணையில் சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதி இடம்பெறுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
இரண்டு மாதம் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் விக்ராந்த் டூரிஸ்ட் ஃபேமிலி பட புகழ் கமலேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வரும் நெல்சன் படம் முடிந்த கையோடு இந்த படப்பில் இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.


