தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி அஜீத்.அதனை தொடர்ந்து அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாலினி அஜித் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் என் குழந்தைகளிடம் இதுவரைக்கும் என் படங்கள் எதுவும் பார்க்கவில்லை தயவுசெய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்களேன் என்று எனக் கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் என் பொண்ணு சமீபத்தில் அலைபாயுதே பத்தி கேட்டா அவை என்னோட சேர்ந்து பார்க்க விரும்புறாங்க ஆனா அது நடக்கல என்று ஜாலியாக கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


