தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது விஷால் 35 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ரவி அரசு இயக்கத்திலும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது விஷால் லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார்.
அதாவது 9 வருடங்கள் தாக்குப் பிடித்து விட்டேன் இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கிறது ஆகஸ்ட் 29ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது
இது மட்டுமில்லாமல் நான் சொன்னபடி அந்த கட்டடம் தயாரானதும் முதல் திருமணம் என்னுடையதுதான் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


