தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கன்னட நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மப்டி என்ற கன்னட படத்தை இயக்கிய நார்தன் இந்த படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.
மப்டி படம் தான் தமிழில் சிம்பு நடிப்பில் ‛பத்து தல’ என்ற பெயரில் ரீ-மேக்கானது. கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை முதலில் நார்தன் தான் இயக்கினார். பிறகு சில பிரச்சனையால் வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.