actor-kamalhaasan-latest-interview
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மாபெரும் நட்சத்திர பட்டாலங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் சாதனை செய்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து இருந்தது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வரும் இப்படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து திரையரங்கில் கண்டு களித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் அதில், “மக்கள் இப்படத்தை பெரும் அளவில் ஆதரிக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் போற்றும் ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் வீரனாக இருக்கும் மணிரத்னத்தையும், அவருக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திர பட்டாளத்தயும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்” என்று அனைவரையும் பாராட்டி பேசி இருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…