நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்..
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எக்கச்சக்கமாக இருந்தது இந்த படம் முடிந்த கையோடு தற்போது விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டம் வாரியாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில் அவரது மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று அறிவித்து இருந்தார். காரணம் அவர் நடிகை ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும் கூறி இருந்த நிலையில் விஜய் பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷாவுடன் வந்தது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் அரசியல் பிரமுகர்களும் நடிகர்களும் அவர்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் விஜய் மீது வைத்து வரும் நிலையில் நடிகர் ஜான்விஜயிடம் விஜய் குறித்து கேட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜான் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நம்முடன் பணியாற்றிய சக நடிகர் சமூக சேவை செய்ய அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்கத்தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பிறகு அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது பற்றி கேட்க ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது அசிங்கம் என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அவர் நாட்டுக்கு என்ன பண்ண போறாரு ஊருக்கு என்ன பண்ண போறாரு அரசியலில் என்ன பண்ண போறாருன்னு பேசலாம் அதை விட்டுட்டு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது இங்கிதம் இல்லை என்று சொல்லுவேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


