தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து தற்போது அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
இந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்காகவே அஜித் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


