தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரது நடிப்பில் இறுதியாக த்ரீ பிஎச்கே என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரத்குமார் வீட்டில் அவரது மகள் கடி ஜோக் சொல்ல அதை சரத்குமார் கேட்டுள்ளார்.
முதலில் மகள் பட்டர் வியாபாரி எப்படி லெட்டர் எழுதுவார் என்ற கேள்வியை கேட்க, அதற்கு சரத்குமார் கையில்தான் என சொல்லுகிறார் உடனே மகள் உருகி உருகி எழுதுவார் என்று சொல்லுகிறார்
உடனே இரண்டாவது ஜோக்காக தண்ணியே இல்லாத கடல் எங்கே இருக்கும் என்று கேட்க அதற்கு அவர் யோசித்துக் கொண்டு இருக்க உடனே மேப்பில் இருக்கும் என்று சொல்லிவிடுகிறார். இந்த ஜோக்குகளைப் கேட்ட சரத்குமார் அவரை நோக்கியே கைகாட்டி இது மாதிரி ஜோக் சொல்லுவியா சொல்லுவியா என்று கேட்டுள்ளார்.
இந்த அப்பா மகளின் ஜாலியான உரையாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


