தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருக்கும் சன் தொலைக்காட்சியில் மக்களின் பேவரைட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் மெகாத்தொடர் தான் சுந்தரி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கேப்ரெல்லா தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சீரியலில் கணவருடன் கசப்பான வாழ்க்கையில் இருப்பது போல் நடிக்கும் கேப்ரெல்லா தனது நிஜ வாழ்க்கையில் அவர் கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். டிக் டாக் மூலம் பிரபலமான இவர் தற்போது தனது நடிப்பு திறமையால் கதாநாயகியாக சின்ன திரையில் நடித்து பல மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram

