actor prasanna
துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை புரிந்தது.
படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவை காட்சியில், சுரேஷ்கோபி வளர்க்கும் நாய்க்கு, ‘பிரபாகரன்’ என்று பெயர் வைத்து அழைப்பார். இது, சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. துல்கர் சல்மான் உள்பட படக்குழுவினர் அனைவரையும் இணையதளங்களில் திட்டி தீர்த்தார்கள்.
இதுபற்றி நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில், “நாம் பேசும் வசனத்தைப் போலவே அவர்கள் ஊரில் இந்த வசனம் பிரபலமானது. தவறான புரிதலின் அடிப்படையில், வெறுப்பை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். இதற்காக பிரசன்னாவுக்கு, துல்கர் சல்மான் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
பிரசன்னா மேலும் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் என்னை திட்டுகிறார்கள். அதோடு, என் பெற்றோர்கள், மனைவி மற்றும் குடும்பத்தினரையும் திட்டுகிறார்கள். என்னை திட்டுவது சரி, என் குடும்பத்தினரை திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சமூக வலைத்தளங்களில் பிரச்சினைகளை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துகிறார்கள். அதனால் டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இருந்து வெளிவந்து விடலாமா? என யோசிக்கிறேன்” என்றார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ரா உடன் டேட்டிங் செய்து வருவதாக…
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சத்தியவான் சாவித்திரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அட்லீ, தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் ‘ராக்கா’ படத்தை இயக்கி வருகிறார். இதில்…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தை முடித்த கையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் சிபி…
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள Toxic: A Fairy Tale…
எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க முயலும் இளைஞராக தனுஷ் நடித்திருக்கும் இந்த படம், ஒரு கிராமத்து ஹீஸ்ட் திரில்லராக தொடங்குகிறது.…