Will the announcement of Kaithi-2 be released soon with a teaser?
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?
கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது.
ஏனென்றால், ‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் டில்லி. ஆகையால் ‘கைதி 2’ படத்தின் பெயர் இதுவா, டீஸர் படமாக்கி இருக்கிறார்களா என விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று வருகின்றன.
அல்லு அர்ஜுன் படத்தை முடித்துவிட்டு, ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனாலேயே இந்த விவாதம் வலுத்துள்ளது. ‘டில்லி’ என்ற பெயரில் தனியொரு படத்தினை உருவாக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.
ஆனால், ‘கைதி 2’ படத்தின் பெயரை மாற்ற ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘கைதி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இக்கதையின் தொடர்ச்சியாகவே ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இக்கதைகளின் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’, ‘விக்ரம் 2’ உள்ளிட்டவற்றை லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். மேலும், மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படம் ஆக்சன் ஜானரில் தற்போது உருவாகி வருகிறது.
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…