Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

Why did the Delhi High Court issue a notice to Salman Khan?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வெளியான ‘மதராஸி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இச்சூழலில் சல்மான்கான் தொடர்பான வழக்கு பற்றிக் காண்போம்..

ஆளுமை உரிமை வழக்கில் சல்மான் கானுக்கு டெல்லி உயர் நீதி​மன்​றம் நோட்டீஸ் அனுப்பி​யுள்​ளது. சல்மான் கான், கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம், ஆளுமை உரிமை கோரி டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு​தாக்கல் செய்​திருந்​தார்.

விசா​ரித்த நீதி​மன்​றம், சல்​மான்கானின் அடை​யாளம், குரல் போன்​றவற்றை எந்த நபரோ, வலை​தளமோ, செயலியோ அல்லது மின் வணிக தளமோ பயன்​படுத்த இடைக்​காலத் தடை விதித்தது.

இந்​நிலை​யில், சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்​ணறிவு நிறு​வனம் ஒன்று குரல் மாதிரி​களை உரு​வாக்​கு​வதை முதன்மை வணி​க​மாகச் செய்து வரு​கிறது. இந்​நிறுவனம் சல்​மான் கானின் ஆளுமை உரிமை வழக்​கில் உயர்​நீ​தி​மன்​றம் வழங்​கிய இடைக்​கால தடையை நீக்​கக் கோரி டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளது. இதையடுத்து இந்த மனுவுக்கு 4 வாரங்​களில் பதில் அளிக்கும்படி, சல்​மான் கானுக்கு நோட்​டீஸ் அனுப்​பிய டெல்லி உயர் நீதி​மன்​றம், வழக்கை பிப்​ரவரி.27-ந் தேதிக்​குத்​ தள்ளிவைத்தது.

Why did the Delhi High Court issue a notice to Salman Khan?
Why did the Delhi High Court issue a notice to Salman Khan?