பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கியவர் ஜேக்குலின். இவர் ஷோவை தாண்டி இவரது குரலையே நிகழ்ச்சியில் பலர் கிண்டல் செய்வார்கள்.
ஆனால் ஜேக்குலின் அதையெல்லாம் அசால்டாக எதிர்க்கொள்வார். நிகழ்ச்சி தொகுத்து வழங்கிவந்த அவர் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இடையில் காணாமல் போன அவர் மீண்டும் தேன்மொழி என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கினார். சீரியலும் இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் போட அதற்கு ரசிகர் ஒருவர் அதிக மேக்கப் இருப்பதால் நிப்பான் பெயின்ட் என கலாய்த்துள்ளார்.
அதைப்பார்த்த ஜாக்குலின் மேக்கப் இல்லாத புகைப்படம் வெளியிட்டு இது என்னை கலாய்த்தவர்களுக்காக என பதிவு செய்துள்ளார்.


