சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, மாயா, ஷிவானி நாராயணன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அந்த வகையில் இப்படத்தில் விபச்சாரியாக நடித்தவர் மாயா. இவருடைய கதாபாத்திரம் ஒரு சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும் படத்தில் செம பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இவர் இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார்.
அதாவது நான் விக்ரம் படத்தில் விபச்சாரியாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. படத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிப்பது தான் எனது வேலை. நான் பெரிய உத்தமி இல்லை என்று கூறியிருக்கிறார். இப்படி பயங்கர ஓபனாக பதில் அளித்துள்ள மாயாவின் இந்த பேட்டியின் தகவலை பற்றி தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


