தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தற்பொழுது ரசிகர் பட்டாளங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
அந்த வகையில் இவர் ஹிந்தியில் தற்போது அமிர்கான் நடிக்கும் ‘லால் சிங் சத்தா’ என்ற இந்திப் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துவருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா தாக்கத்தால் கடந்த 5 மாதங்கள் மாதங்களாகவே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பிற்கான அனுமதி கிடைத்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் தொடங்கப்பட்டுள்ளது.
துருக்கியிலிருந்து விஜய் சேதுபதி அவ்வபோது படப்பிடிப்பு காட்சிகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இவர் தனது கமெண்டில், கொரோனா உடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றும், இவர் ரொம்ப எதார்த்தமான குணம் என்பதால், போய் அவங்கவங்க வேலைய பாருங்கடா என்று அவர் பாணியில் பதிவிட்டுள்ளார்.

