தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கப் போகும் படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது அஜித் கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் துபாயில் நடக்கும் ரேசில் அஜித் கலந்து கொண்டு இருக்கும் இடத்திற்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சென்று அவரை சந்தித்து பேசி அங்கு இருப்பவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


