vignesh sivan post about nayanthara surprise viral
இந்திய திரை உலகில் பிரபல நட்சத்திர தம்பதியினராக திகழ்ந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு இரண்டு முறை ஹனிமூன் சென்று விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து இணையத்தை தெறிக்க விட்டனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி விக்னேஷ் சிவனின் 37 வது பிறந்தநாள் அன்று நயன்தாரா அவரை துபாய் அழைத்து சென்று சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதாவது, உலகின் மிக உயரமான கட்டிடமாக போற்றப்படும் துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர், நயன்தாரா அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனது பிறந்தநாள் என் குடும்பத்தினரின் பரிசுத்தமான அன்பாலும், என் தங்கம், என் மனைவியின் சர்ப்ரைஸாலும் நிறைந்துள்ளது” என்று புகைப்படங்களுடன் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். அவரது இந்த மகிழ்ச்சியான பதிவு ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…