ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “விடுதலை”. இதில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.


