தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம் காத்து வாக்குல இரண்டு காதல்.
படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைக்க விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்து இருந்தார்.
ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லையாம். சிவகார்த்திகேயனை மனதில் வைத்துதான் இந்த கதை எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக தகவல் கசிந்துள்ளது.


