முகப்பொலிவிற்கு உதவும் துளசி டோனர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பல்வேறு கிரீம்களையும், ஃபேஸ் வாஷ்களையும் பயன்படுத்துகின்றன. ஆனால் அதனால் சில பக்க விளைவுகளையும் சிலர் அனுபவிக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான முறையில் முகத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் சுருக்கங்கள் நீக்கவும் துளசி டோனர் பயன்படுகிறது.
துளசி டோனர் செய்ய முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து பிறகு அதில் துளசியை சேர்த்து 10 நிமிடம் கழித்து வடிகட்டி குளிர்ந்த பிறகு அதில் பாதி அளவு பன்னீர் சேர்க்க வேண்டும்.பிறகு முகத்தை நன்றாக கழுவிய பின் துளசி டோனரை ஸ்பிரே செய்து காய்ந்த பிறகு மாய்ஸ் சரைஸ் தடவ வேண்டும்.
தொடர்ந்து இப்படி தடவி வந்தால் சருமத்திற்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எனவே ஆரோக்கியமற்ற கிரீம்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயாரித்த இந்த டோனரை பயன்படுத்தி முகம் பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

